உள்ளூர் செய்திகள்

காளையார்கோவிலில் நடந்த அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் பேசினார். 

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Published On 2023-05-29 07:58 GMT   |   Update On 2023-05-29 07:58 GMT
  • சிவகங்கை அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
  • ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

காளையார்கோவில்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் நாகனி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காட்டுப்புலி சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் வி.பி. ராஜன் சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் வனிதா கண்ணதாசன், சாந்தா கருப்பசாமி, அஜித்குமார், இலக்கிய அணி அரசு, முத்து, தொண்டரணி பிரபு, முருகேசன் குழந்தைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்அரசு நன்றி கூறினார்.

கொல்லங்குடி

காளையார்கோயில் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கொல்லங்குடியில் அவைத்தலைவர் சுப. தமிழரசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஆர்.எம். கென்னடி முன்னி லையில் அரசின் அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், தலைமைக்கழக பேச்சாளர் வி.பி.ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, கண்ணாத்தாள், தென்னரசு, செல்லப் பாண்டி, சுப.கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி சுசீந்திரன் சந்திரன், நேரு, சதீஷ்குமார், அசோக், ஜெயராஜ், மிலிட்டரி பிரபு, ஆகாஷ், சீனிவாசன், பாலமுருகன், முருகன், முக்கையா, முருகன், நைனா, நாட்டரசன்கோட்டை பேருர் செயலாளர் ஜெயரா மன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News