உள்ளூர் செய்திகள்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Published On 2023-05-24 08:22 GMT   |   Update On 2023-05-24 08:22 GMT
  • பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
  • பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்ப்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார். செயலர் வெங்கடாசலம் செட்டியார், பொருளாளர் அம்மையப்பன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வள்ளியம்மை வரவேற்றார்.

பிளஸ்-2 தேர்வில் 573 மதிப்பெண் பெற்ற துர்காதேவி, 10-ம் வகுப்பு தேர்வில் 485 மதிப்பெண் பெற்ற மீனாட்சி உள்ளிட்ட 7 மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் மாணவர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் திருஞானசம்பந்தம் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்களையும் கூறினார். ஆசிரியர் லியோ நன்றி கூறினார்.

Tags:    

Similar News