உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் முன்பதிவு இடம் மாற்றம்

Published On 2022-09-24 13:10 IST   |   Update On 2022-09-24 13:10:00 IST
  • காரைக்குடி ரெயில் நிலையத்தில் முன்பதிவு இடம் மாற்றப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
  • பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.

காரைக்குடி

காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடமும், தினசரி ரெயில்களுக்கு டிக்கெட் வழங்கும் இடமும் தனித்தனியாக இருந்தன.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் 2 கவுண்டர்களையும் ஒரே இடமாக மாற்றியது.இதனால் காரைக்குடி ரெயில் நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு தினமும் 250 பயணிகள் முன்பதிவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு பலலட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாகவும் தெரிகிறது.

தற்போது தினசரி ரெயில்களுக்கு பயணிகள் அதிகமாக டிக்கெட் எடுப்பதால், முன்பதிவுக்கு செல்பவர்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. சில நேரங்களில் டிக்கெட் வழங்கும் ஊழியருக்கும், பயணிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

எனவே, காரைக்குடி ரெயில் நிலையத்தில் பழைய முறைப்படியே தனித்தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகத்தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News