உள்ளூர் செய்திகள்

வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு

Published On 2023-05-20 08:31 GMT   |   Update On 2023-05-20 08:31 GMT
  • வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை

சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந் அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றிய புகாரின்பேரில் மனோபாலாவை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News