உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி தலைவர், துணைதலைவர் போட்டியின்றி தேர்வு

Published On 2022-09-22 06:54 GMT   |   Update On 2022-09-22 06:54 GMT
  • இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணைதலைவர் போட்டியின்றி தேர்வாயினர்.
  • அவர்களுக்கு, தமிழரசி எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் பெண்தலைவர் மற்றும் துணை தலைவராக இருந்த செய்யதுஜமிமா, சபுரியத்பீவி ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்து பதவிவிலகினார்கள். அதைதொடர்ந்து 13-வதுவார்டில் இடைதேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நகர்செயலாளர் நஜீமுதின் மற்றும்14வதுவார்டு தி.மு.க. கவுன்சிலர் இபுராஹிம் ஆகியோர்பேரூராட்சி உறுப்பினர்களால் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் போட்டியின்றி தலைவர், துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் நஜீமுதின், துணைத்தலைவர் இபுராஹிம் ஆகியோருக்கு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News