அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது வீடு புகுந்து சரமாரி தாக்குதல்
- அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது வீடு புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
- ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். இவரது மனைவி ராதா. இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இத்தேர்தலின்போது ராதாவுக்கும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.இருவரது வீடும் அருகருகே உள்ளது.
இந்நிலையில் ஜெயமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து கவுன்சிலர் ராதா வீட்டுக்குள் அவரையும், அவரது மாமியாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராதா, அவரது மாமியார் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.
அவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், நகர செயலாளர் ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசில் தி.மு.க. பெண் நிர்வாகி மீது புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை செய்து வருகிறார்.