உள்ளூர் செய்திகள்

சமகோண ஆசனம்

சமகோண ஆசனம் செய்து மாணவர்கள் சாதனை

Published On 2022-06-15 13:47 IST   |   Update On 2022-06-15 13:47:00 IST
  • சிவகங்கையில் சமகோண ஆசனம் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.
  • இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை ஐேகார்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர்

சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 415 மாணவர்கள் பங்கேற்ற சமகோண ஆசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை ஐேகார்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் தொடங்கி வைத்தனர்.

கடினமான இந்த ஆசனத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக 30 நிமிடம் செய்து மாணவர்கள் சாதனை படைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 21 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு உறுதுணையாக சிவகங்கை மாவட்ட பயிற்சியாளர்கள் அரவிந்த் மாணிக்கம் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News