உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழாவை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, கொறடா கோவி.செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அரசு பள்ளியில் சிறார் திரைப்பட திருவிழா - அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-07 08:16 GMT   |   Update On 2022-07-07 08:16 GMT
  • தீ கிட் என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
  • மாணவர்களுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறார் திரைப்படத் திருவிழாவினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிறார் திரைப்பட திருவிழா இன்று தொடங்கப்பட்டு. "தீ கிட்" என்று சார்லி சாப்ளின் திரைப்படம் திரையிடப்பட்டு இத்திரைப்படத்தை மாணவ -மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் .

மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்காக தஞ்சை திரைப்படம் மன்றம், பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சார்லி சாப்ளின் திரைப்பட மன்றம், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்யஜித்ரே திரைப்பட மன்றம், தாராசுரம் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கே.பாலச்சந்தர் திரைப்பட மன்றம், திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாலு மகேந்திரா திரைப்படம் மன்றம், உடையாளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மணிரத்தினம் திரைப்படம் மன்றம் ஆகிய திரைப்படம் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ -மாணவிகளுக்கு இம்மன்றங்கள் மூலம் சிறார் திரைப்படங்கள் திரையிட்டு நல்ல கருத்தினையும் நல்ல பண்பினையும் எடுத்துரைக்க வழிகாட்டும்.இஇவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ, முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News