உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை

Published On 2023-03-02 09:28 GMT   |   Update On 2023-03-02 09:28 GMT
  • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
  • நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.

தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.

எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News