உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நடந்தது.

தஞ்சையில், மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்

Published On 2023-10-11 09:52 GMT   |   Update On 2023-10-11 09:52 GMT
  • 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும்.
  • ஏழை பயணிகளின் நலனை கருதி இலவச கழிவறை கட்ட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவையின் 37-வது ஆண்டு விழா தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.

முன்னதாக பேரவை துணைத்தலைவர் பழனி வேலு அனை வரையும் வரவேற்றார்.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் வக்கீல் கோ.அன்பரசன், இணை செய லாளர் குருநாதன், பேரவை நிறுவனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் 75 வயது நிரம்பியவர்களுக்கு மாவட்ட கருவூல அதிகாரி கணேஷ் குமார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

தொடர்ந்து, விளை யாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாரத் கல்விக்குழும நிர்வாக இயக்குநர் புனிதா கணேசன் பரிசுகள் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தஞ்சை மருத்துக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மீனாட்சி ஆஸ்ப த்திரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணை தலைவர் திருமலை மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்தர்தாஸ், துரைராஜன், அறிவழகன், அரிமா செல்வராசு, ஞானசேகர், தங்கவேலு, கோபாலகிருட்டிணன், அய்யனார், செண்பக லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உடன் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்,

தஞ்சை மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தனி புற நோயாளிகள் பகுதியும், தனி உள் நோயாளிகள் பிரிவும் ஏற்படுத்த வேண்டும், புதிய, பழைய பஸ் நிலையங்களில் கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. ஏழை பயணிகளின் நலன் கருதி இலவச கழிவறை கட்டுவதுடன் அவற்றை சுகாதாரமாக பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News