உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

Published On 2023-03-03 15:37 IST   |   Update On 2023-03-03 15:37:00 IST
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
  • 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு.

அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோக திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 2000 டன் நெல்லை, 42 வேகன்களில் தொழிலாளர்கள் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து 2000 டன் நெல் வீதம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News