உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Published On 2023-03-31 15:01 IST   |   Update On 2023-03-31 15:01:00 IST
  • கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.
  • கல்லூரி இயக்குனர் உள்ளிட்ட பலர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

நெல்லை:

சாரதா மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில்" தரவு அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் வள்ளிநாயகி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்லூரி உதவிப் பேராசிரியர் பொன்மொழி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வு சுருக்கப் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். முன்னதாக அவரை சாரதா கல்லூரி உதவி பேராசிரியர் விஜயலட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார்.

தொடர்ந்து தரவு அறிவியல்- திசைகள் மற்றும் வாழ்க்கை சுழற்சி" என்ற தலைப்பில் பாண்டிச்சேரி டான் போஸ்கோ கல்லூரி உதவி பேராசிரியர் ராம லெட்சுமி, உரையாற்றினார். கருத்தரங்கில் கல்லூரி இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் உதவிபேராசிரியர் அமுதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News