உள்ளூர் செய்திகள்

வாகனம் மூலம் சாலையோரங்களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை நடைபெறும் காட்சி.

4 கிலோ ரூ.50 க்கு கூவி கூவி விற்பனை சாலையோரம் வாகனங்களில் மலிவாக கிடைக்கும் தக்காளி

Published On 2022-08-25 10:07 GMT   |   Update On 2022-08-25 10:07 GMT
  • தக்காளி விலை குறைவால் போட்டி போட்டு வாங்கி செல்லும் பொதுமக்கள்.
  • ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

நாமக்கல்:

தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், மணப்பாறை, கரூர், தொட்டியம், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன் விளைச்சல் சரிவால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக சரிவடைந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க குறைவான விலைக்கு கிலோ ரூ.5-க்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் விவசாயிகள் கிலோ ரூ.10, 12 என்ற விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

சாலையோரங்களிலும், வீதி, வீதியாக சென்றும் ஒரே நாளில் 600 கிலோ வரை தக்காளியை விற்கின்றனர். நாமக்கல் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் சரக்கு வாகனங்களில் தக்கா ளியுடன் முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து வியாபாரி கள் கூறுகையில், தக்காளி விளைச்சல் வரும் அக்டோபர் மாதம் வரை அதிகரித்து காணப்படும். ஒரு செடியில் 10 பழங்கள் காய்த்தால், தற்போது 30 பழங்கள் வரை காய்க்கும் பருவமாகும். இதனால் விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் மொத்த மாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று 4 கிலோ ரூ.50 என விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News