உள்ளூர் செய்திகள்

மாநில கைப்பந்து அணிக்கு தேர்வான ஓசூர் வீராங்கனைகள் மேயர் சத்யாவிடம் வாழ்த்து

Published On 2022-12-14 15:10 IST   |   Update On 2022-12-14 15:10:00 IST
  • 2 பேர் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • மேயர் எஸ்.ஏ.சத்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஓசூர்,

தமிழ்நாடு மாநில கைப்பந்து அணிக்கான தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் மைதா னத்தில் நடைப்பெற்றது

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வீராங்க னைகள் பங்கேற்ற நிலையில், ஓசூரை சேர்ந்த தனியார் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளான நவ்யாஸ்ரீ, சக்தி ஆகிய 2 பேர் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கைப்பந்து பயிற்சியாளர்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News