உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-08-24 14:39 IST   |   Update On 2022-08-24 14:39:00 IST
  • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
  • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News