உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
- நெய்வேலியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
நெய்வேலி நகர பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஜெயதேவி உள்ளிட்ட போலீசார் நெய்வேலி நகர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்பொழுது பெரியார் சதுக்கம் அருகில் பாரதி நகரை சேர்ந்த ராமஜெயம் விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அப்போது அவரது கடையில் சுமார் 10000 மதிப்புள்ள 800 புகையிலை பாக்கெட் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.