உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-01-01 14:41 IST   |   Update On 2023-01-01 14:41:00 IST
  • தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி.
  • கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிட தொழிலாளி. கருப்பசாமிக்கும் அவரது சகோதரிகளுக்குமிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக கருப்பசாமி தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ் பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ் பெக்டர் முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News