உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே விவசாயிக்கு சரமாரி வெட்டு

Published On 2023-01-31 14:09 IST   |   Update On 2023-01-31 14:09:00 IST
  • சம்பவத்தன்று சுப்பிரமணியன் மலையடிபுதூர் அய்யா கோவில் தெருவில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
  • ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அரிவாளால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டினார்.

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது62). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தளவாய் பாண்டியன் மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணியன் மலையடிபுதூர் அய்யா கோவில் தெருவில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் அவரை வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அரிவாளால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து, உதடு, இடது கை மணிக்கட்டு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு, களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது மருமகன் முருகன் (34) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு ராம கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கடேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News