உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்- ஐ.டி.ஐ. மாணவர் கைது

Published On 2022-07-21 07:22 GMT   |   Update On 2022-07-21 07:22 GMT
  • ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன் ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.
  • பிரவீனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்:

திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் திருமுல்லைவாயல் வ.உ.சி., நகரை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் பிரவீன்(19) ஆசைவார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவியை விட்டுவிட்டு பிரவீன் தப்பி சென்று விட்டார். மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பிரவீன் ஆசைவார்த்தை கூறி, அழைத்து சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கிடையே திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த பிரவீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News