உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்

Published On 2022-12-17 10:07 GMT   |   Update On 2022-12-17 10:07 GMT
  • நித்யஸ்ரீ பள்ளிக்கு செல்லவில்லை.வீட்டுக்கும் திரும்பவில்லை.
  • 2 மாணவிகளும் ஒன்றாக சென்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பாகலூர் பகுதியை சேர்ந்தவர்கோபி.

இவரது மகள் நித்யஸ்ரீ (வயது 16).இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்ட நித்யஸ்ரீ பள்ளிக்கு செல்லவில்லை.வீட்டுக்கும் திரும்பவில்லை. அவர் பற்றி விசாரித்தும் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து ஓசூர் டவுன் போலீசில் கோபி புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஆவணப்பள்ளி பகுதியை சேர்ந்த முரளி என்பவரது மகள் பவ்யா (16) என்ற மாணவியும் நேற்று முதல் மாயமாகி விட்டார்.இது குறித்து முரளி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

இந்த இரு புகார்கள் மீதும் வழக்கு பதிந்துள்ள போலீசார் மாயமான 2 மாணவிகளும் ஒன்றாக சென்றுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News