உள்ளூர் செய்திகள்

லாரி மீது பள்ளி பேருந்து மோதி விபத்து- 10 குழந்தைகள் காயம்

Published On 2022-08-05 12:52 GMT   |   Update On 2022-08-05 12:52 GMT
விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தின் இன்சூரன்ஸ் மற்றும் எப்.சி. காலாவதியாகிவிட்டதாக தகவல்

சிவகங்கை:

சிவகங்கை அருகே பெருமாள்பட்டி விலக்கில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் மீது, பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்தில் இருந்த 10 குழந்தைகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தின் இன்சூரன்ஸ் மற்றும் எப்.சி. காலாவதியாகி 2 வருடம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லைசென்ஸ் காலாவதியான பேருந்தை இயக்குவதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News