உள்ளூர் செய்திகள்
- சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ராமமூர்த்தி, முத்துராஜா, முருகேஸ்வரி, ப்ளாட்டினா மேரி, இந்திரா, ஜெப தங்கம், சுமதி, பிரவீனா, அமுதா, முத்துமாரி, சுகாதார மேற்பார்வையாளர் நித்ய கல்யாண் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.