உள்ளூர் செய்திகள்

அள்ளப்படாமல் உள்ள குப்பைகள்.

கொடைக்கானலில் அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்கேடு

Published On 2022-09-05 04:48 GMT   |   Update On 2022-09-05 04:48 GMT
  • கொடைக்கானல் நகர் பகுதியில் பல மாதங்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
  • குப்பைகள் அதிகம் தேங்குவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா ராமசாமி நகர் பகுதியில் பல மாதங்களாக முறையாக குப்பைகள் அகற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இப்பகுதியில் தினசரி குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்றும் எப்போதாவது வந்து தான் குப்பைகளை அகற்றுகிறார்கள்.

குப்பைகள் அதிகம் தேங்குவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாகவும், அப்பகுதியை கடக்கும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News