உள்ளூர் செய்திகள்

சேலம் குகை மூங்கபாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் பிளஸ்-1 மாணவிகளை படத்தில் காணலாம்.

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு தொடக்கம்

Published On 2023-03-14 09:39 GMT   |   Update On 2023-03-14 09:39 GMT
  • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.
  • தேர்வு துறையில்‌ வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின்‌ போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள்‌ மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்‌.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 36 ஆயிரத்து 143 பேர் எழுதினர்.

தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் இன்று காலை பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. 155 மையங்களில் 16 ஆயிரத்து 706 மாணவர்கள் 19,437 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 143 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேலம் கோட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே மாணவிகள் ஆர்வத்துடன் வந்து தேர்வில் பங்கேற்றனர்.

முன்னதாக தேர்வு துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை இறைவணக்கத்தின் போது தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கினர். தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News