உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

மேட்டூரில் போலீசார் சார்பில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-08-24 07:37 GMT   |   Update On 2023-08-24 07:37 GMT
  • மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்றால் அதனை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News