உள்ளூர் செய்திகள்

மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர்

Published On 2023-05-29 13:10 IST   |   Update On 2023-05-29 13:10:00 IST
  • மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
  • இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை.

மேட்டூர்:

மேட்டூர் நகராட்சியில் 99 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. இந்த சம்பள பணத்தை வழங்க வலியுறுத்தி இன்று காலை வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்ைத நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்களின் இந்த போராட்டத்தினால், மேட்டூர் நகர் புறங்களில் குப்பைகள் மலைேபால் தேங்கும் நிைல ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதேபோன்று அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டபோது கடந்த வாரம் வெள்ளிக் கிழமைக்குள் சம்பளத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நகராட்சி நிர்வா கத்தினர் தெரிவித்தனர். ஆனால் கூறியபடி வெள்ளிக்கிழமை (19-ந் தேதி) சம்பள பணம் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால் தான் இன்று மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளதாக தெரி வித்தனர். இந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 3 மாதம் அல்லது 4 மாத ங்களுக்கு ஒரு முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் சம்பளத் தொகையை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News