உள்ளூர் செய்திகள்

வாழப்பாடியில் ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-06-06 07:26 GMT   |   Update On 2023-06-06 07:26 GMT
  • சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
  • காய்கறி விற்பனை டெம்போ டிரைவர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.

வாழப்பாடி:

சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக நேற்று இரவு விருதாச்சலம் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த காய்கறி விற்பனை டெம்போ டிரை வர் தினேஷ்குமார் (வயது 23) என்பவர், ரெயில் பாதையை கடக்க முயன்றார்.

இதில் ரெயில் தினேஷ்கு மார் மீது மோதியதில், அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சேலம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News