சேலம் அருகே சோகம் மோட்டார் சைக்களில் இருந்து விழுந்து வாலிபர் பலி
- நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
- அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லகவுண்டம்பட்டி 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜீவானந்தம் (32), இவருக்கு திருமணமாதாக நிலையில் பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
ஸ்டேண்டை எடுக்காமல்...
இந்த நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. சைடு ஸ்டேண்ட் கீழே உரசியதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டு உயிருக்கு போராடினார்.
பரிதாப சாவு
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.