மனைவி கொலை வழக்கில் ரவுடி சரண்;காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
- காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திருமணம் செய்துகொண்டார்.
- உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திரு மணம் செய்துகொண்டார். அவர் கடந்த, 20-ந் தேதி உடலில் வெட்டு காயங்களு டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:
காளியம்மாள், ரகு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்துக்கு முதல்நாள் இரவு ரகு, அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால், காளியம்மாள் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார், ரகுவை தேடி வந்த நிலை யில் நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை, சேலம் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பார்.
பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவ டிக்கைகளை எடுத்து வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.