உள்ளூர் செய்திகள்
தாரமங்கலம் அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை
- அண்ணாமலை (வயது 36) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு பணம் ரூ. 25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.
- சில மாதங்களாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம். செவந்தானுர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 36) இவர் ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு பணம் ரூ. 25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். பிறகு சில மாதங்களாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்த செல்வம் சம்பவத்தன்று பணம் கேட்டு வந்த அண்ணா மலையை அடித்து உதைத்தா தாக தெரிகிறது. காயம் அடைந்த அண்ணாமலை ஓமலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தாரமங்கலம் போலீசார் செல்வம், பிரகாஷ், பாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.