ஆறுமுகசாமி
பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
- சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
மேட்டூர்:
ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் பெருமாள் கோவில் உள்ளது.
உண்டியல் உடைப்பு
சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த குணசேகரன் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமை யிலான போலீசார் கோவி லில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
ரகசிய தகவல்
இந்த நிலையில் உண்டி யல் பணத்தை திருடிய சுரேஷ் என்கிற ஆறுசாமி (36) என்பவர் வனவாசி பஸ் நிலையத்தில் இருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் வனவாசி பஸ் நிலையம் விரைந்து சென்றனர்.
கைது
அங்கு சேலம் செல்லும் தனியார் பஸ்சில் இருந்த சூரப்பள்ளி கிராமம் நறியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் என்கிற ஆறுசாமியை கைது செய்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் உண்டியலை உடைத்து ரூ.1500 திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் இந்த வாலிபர் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.