உள்ளூர் செய்திகள்

கைதான கார்த்திக்கை போலீசார் அழைத்து சென்ற காட்சி

முதியவர் கொலை வழக்கில் கூலித் தொழிலாளி கைது

Published On 2023-10-01 08:26 GMT   |   Update On 2023-10-01 08:26 GMT
  • மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மேட்டூர்:

மேட்டூர் 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே முதியவர் முரு கேசன் (60) கழுத்த றுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் (38) முதியவரை கொலை செய்தது தெரிய வந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று இரவு பி.என்.பட்டி, கிராம நிர்வாக அலுவலர் கலையரசனிடம் சரணடைந்தார். கலை யரசன் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தனர்.

அப்போது குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தான் வைத்திருந்த கொடுவாளால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இதனை அடுத்து கார்த்திகை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News