உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையம் நகராட்சியில்அளவு குறைவாக அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை

Published On 2023-07-27 07:23 GMT   |   Update On 2023-07-27 09:56 GMT
  • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
  • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News