குடும்ப பிரச்சனையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- செங்கோட்டையன் (75), சம்பவத்தன்று இரவு இவர் எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வெள்ளரி வெள்ளி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவ்வழியாக சென்ற வர்கள் செங்கோட்டையனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி பகு தியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (75), சம்பவத்தன்று இரவு இவர் எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வெள்ளரி வெள்ளி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவ்வழியாக சென்ற வர்கள் செங்கோட்டையனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தான் குடும்ப கஷ்டத்தில் மனமுடைந்து விவசாய பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து விட்டதாக தெரி வித்தார்.
இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக செங்கோட்டையன் சேலத் தில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செங்கோட்டையன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதுகுறித்து பூலாம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.