உள்ளூர் செய்திகள்

20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு

Published On 2023-05-24 09:46 GMT   |   Update On 2023-05-24 09:46 GMT
  • பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன.

ஆத்தூர்:

ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள கல்லூரியில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர் ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. 

Tags:    

Similar News