உள்ளூர் செய்திகள்
நங்கவள்ளியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டடம்
- சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேட்டூர்:
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி பஸ் நிலையத்தில் ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், நங்கவள்ளி நகர செயலாளர் நடராஜ், மாதர் சம்மேளன மாவட்ட பொருளாளர் அம்பிகா, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் வேம்பன், விஜயமாணிக்கம், சாம்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி சந்திரன், சஞ்சீவி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் என 50- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.