உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

Published On 2023-06-24 14:56 IST   |   Update On 2023-06-24 14:56:00 IST
  • பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

சேலம்:

சேலம் அம்மாபேட்டை சத்யா நகர் பகுதி சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பரத் (வயது 22). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை முடிந்ததும், வழக்கம் போல் கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால், கல்லூரியில் பரத் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து, வகுப்பறையில் அனுமதிக்க மறுத்து விட்ட னர். இதனால் மன முடைந்த பரத், சம்ப வத்தன்று விஷத்தை குடித்து விட்ட தாக அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News