உள்ளூர் செய்திகள்

அன்னதானப்பட்டியில் வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2023-08-10 13:22 IST   |   Update On 2023-08-10 13:22:00 IST
  • கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

சேலம்:

சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள நரசிம்மசெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரைண நடத்தி அவர் மீது மோதி வி ட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News