உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அருகே கணவனை இழந்த பெண் மர்ம சாவு

Published On 2023-07-10 07:48 GMT   |   Update On 2023-07-10 07:48 GMT
  • கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
  • இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகு தியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம் எட்டிகுட்டைமேடு பகுதி யில் வசித்து வந்தார்.

தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில், மகன் படிப்பிற்காக தாரமங்கலத் தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

மர்மசாவு

இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, மீனா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா வின் உடலை பார்த்து உறவி னர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சந்தேகம்

பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிண மாக தொங்கியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீ சார், வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்க ளிடமும், அவரது உறவி னர்களிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மீனா, ஏற்கனவே வேலை பார்த்து வந்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில், மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்ம மான முறையில் உயிரிழந் துள்ள சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News