உள்ளூர் செய்திகள்

பிடிபட்ட மலைப்பாம்பை படத்தில் காணலாம்.

சீலநாயக்கன்பட்டியில் வீட்டில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

Published On 2023-06-15 04:57 GMT   |   Update On 2023-06-15 04:57 GMT
  • ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது.
  • மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

சேலம்:

சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டு அருகே நேற்று நள்ளிரவு சுமார் 10 அடி நீள உடனே மலைப்பாம்பு புகுந்தது. உ இதுபற்றி ராஜேந்தி ரன் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள் உதவி மாவட்ட அலுவ லர் சிவக்குமார் தலைமை யில் வீரர்கள் பிரதாப், திருப்பதி, திலீப்குமார், கலை யரசன், ஜெய்ரஞ்சித்குமார், உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த பாம்பு ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

Similar News