உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பனை பொருட்களை தேர்வு செய்யும் பயணிகள்.

நெல்லையில் ரெயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை

Published On 2022-06-23 09:34 GMT   |   Update On 2022-06-23 09:34 GMT
  • ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ரெயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • தற்போது இரண்டாம் கட்டமாக இன்று விற்பனை தொடங்கியது.

 நெல்லை:

ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின் கீழ் தென்னக ெரயில்வே சார்பில் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் 8-ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக இன்று விற்பனை தொடங்கியது.கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி, பனம் பழ ஜூஸ், பனை ஓலை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த விற்பனைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் தற்போது இன்று முதல் மீண்டும் 2-வது முறையாக 15 நாட்களுக்கு பனை பொருட்கள் அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

இங்கு பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பனையில் இருந்து கிடைக்கும் பொருட்க ளிலிருந்து தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் இருந்து 10 சதவீதம் அளவுக்கு விலை குறைவாக இருப்பதால் ெரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இங்கு வெற்றிலைப் பெட்டி, குழந்தைகள் விளையாடும் கிலுக்கு, காய்கறிக் கூடை, விசிறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பனை ஓலையால் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News