உள்ளூர் செய்திகள்

விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை

Published On 2023-02-10 08:01 GMT   |   Update On 2023-02-10 08:01 GMT
  • 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
  • விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.

வெள்ளகோவில் :

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.ஒரு கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 415 விவசாயிகள் தங்களுடைய 3,944 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,300 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,700 முதல் ரூ. 8,656 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.ஒரு கோடி ஆகும்.

விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா். 

Tags:    

Similar News