உள்ளூர் செய்திகள்

பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

பூட்டிய வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2023-09-30 09:24 GMT   |   Update On 2023-09-30 09:24 GMT
  • உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் அருணாச்சலம். (வயது 48). இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் செட்டிசத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டை பூட்டு விட்டு குடும்பத்துடன் சென்றுள்னார்.

மீண்டும் இரவு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் மன்னார்குடி போலீசுக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News