வள்ளியூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி
- மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
- இரவில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டு மாடியில் குடியிருந்தவர் வெளியே வந்து பார்த்துள்ளார்.
நெல்லை:
வள்ளியூர் குட் சாமரிட்டன் நகரை சேர்ந்தவர் மணி கண்டன்(வயது 62). இவர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கொள்ளை முயற்சி
இவரது வீட்டின் மாடியில் அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் வாடகைக்கு குடியிருந்து வருகிறது. மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சென்றுவிட்டார்.
இதனால் அவரது வீட்டில் யாரும் இல்லை. நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்படுவது போன்ற சத்தம் கேட்டு மாடியில் குடியிருந்தவர் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்து அவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
உடனே மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.