உள்ளூர் செய்திகள்

கோவையில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

Published On 2023-03-31 09:18 GMT   |   Update On 2023-03-31 09:18 GMT
  • பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.
  • மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை சின்னியம்பாளையம் - இருகூர் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News