உள்ளூர் செய்திகள்
- அம்பிகா வீட்டில் 8 பவுன் நகை, அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது.
- பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள கொள்ளும்மேடு கிராமம்,பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அம்பிகா. இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந்தேதி 8 பவுன் நகை, அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போனது.
இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி பெரியகாலனி,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் பிரகாஷ்(வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.