உள்ளூர் செய்திகள்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆலங்குடியில், சாலை மறியல்

Published On 2023-07-14 10:00 GMT   |   Update On 2023-07-14 10:00 GMT
  • சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது.
  • தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.

நீடாமங்கலம்:

கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்திய சேலம் மாவட்ட செயலாளர் பெரியசாமி மீது ஒரு மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே. வேலவன் தலைமை தாங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர் விஜய், தலைவர் சந்திரசேகர், பொருளாளர் அருண், நிர்வாகிகள் ஜெயராஜ், ஜோதிபாசு, தினேஷ், சிவகுரு, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்்.

அதில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News