உள்ளூர் செய்திகள்

திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு

ஆற்றின் கரை பகுதி சரி செய்யும் பணி

Published On 2022-08-10 10:04 GMT   |   Update On 2022-08-10 10:04 GMT
  • ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
  • காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான நீர் சென்று கொண்டிருப்பதால் அளகுடியில் தண்ணீர் சென்று கரையில் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியை மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தற்போது தற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்று கரை தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டது.

இப்பகுதியை பொதுப்ப ணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜய குமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் ஊழி யர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News