உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
- சுந்தரம் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.
- பசு மாடு 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.
அரவேணு
கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார். தினமும் அந்த மாட்டை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
நேற்றும் வழக்கம்போல் மாட்டை தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று கால் தவறி அங்கு பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீய ணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலை மையி லான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போரா ட்டத்திற்கு பிறகு பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.