உள்ளூர் செய்திகள்

இலவச தொலைக்காட்சி வைக்க கட்டப்பட்ட அறையில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பத்தை படத்தில் காணலாம்.

சின்னசேலம் அருகே மனைப்பட்டா வழங்க கோரிக்கை

Published On 2023-06-17 08:33 GMT   |   Update On 2023-06-17 08:33 GMT
  • இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர்.
  • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 65). இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களது மருமகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருந்தனர். அதே ஊரில் அரசு தொலைக்காட்சி வைக்க ஒதுக்கப்பட்ட அறையில் 6 பேரும் குடியேறி 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News